search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மக்கள் தொகை"

    • 2021ல் தம்பதிகள் மூன்று குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது.
    • முதல் குழந்தையைப் பெற்ற தம்பதியினருக்கு 3,000 யுவான் வழங்கப்படுகிறது.

    உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடு சீனா. பல ஆண்டுகளாக மக்கள் தொகையில் முன்னிலையில் இருந்து வரும் சீனாவில் முதல் முறையாக மக்கள் தொகை குறைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

    1.4 பில்லியன் மக்கள் தொகை கொண்ட சீன தேசத்தில் அதன் வயதை காட்டிலும் குறைவான எண்ணிக்கையில் பிறப்பு விகிதங்கள் வீழ்ச்சியடைந்துள்ளன.

    2022ம் ஆண்டின் இறுதியில் மக்கள் தொகை சுமார் 1,411,750,000 ஆக இருந்தது என்று பெய்ஜிங்கின் தேசிய புள்ளியியல் பணியகம் தெரிவித்துள்ளது. இது முந்தைய ஆண்டின் இறுதியின் மக்கள் தொகையைவிட 850,000 குறைந்துள்ளது.

    இதேபோல், பிறப்பு எண்ணிக்கை 9.56 மில்லியன் ஆகவும், இறப்பு எண்ணிக்கை 10.41 மில்லியன் ஆகவும் இருந்தது.

    சீனாவின் மக்கள்தொகை கடைசியாக 1960ல் குறைந்தது. 1980ம் ஆண்டுகளில் மக்கள் தொகை பெருக்கத்தின் காரணமாக விதிக்கப்பட்ட கடுமையான "ஒரு குழந்தை கொள்கையை" சீனா 2016 ல் முடித்துக் கொண்டது. 2021ல் தம்பதிகள் மூன்று குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள அனுமதித்தது. ஆனால் சீன அரசு மக்கள்தொகை சரிவை மாற்றியமைக்க தவறிவிட்டது.

    குழந்தை பிறப்பு விகிதம் மந்தநிலையில் இருக்க வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, பணியிடத்தில் பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, உயர்கல்வியை நாடுவது உள்ளிட்ட காரணங்கள் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

    இதுகுறித்து ஆஸ்திரேலியாவின் விக்டோரியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் ஜியுஜியன் பெங் கூறுகையில், " பல தசாப்தங்களாக ஒரு குழந்தை கொள்கையின் காரணமாக சீன மக்களும் சிறிய குடும்பத்துடன் வாழ்ந்து வருகின்றனர். பிறப்பை ஊக்குவிக்க சீன அரசாங்கம் பயனுள்ள கொள்கைகளைக் கண்டறிய வேண்டும். இல்லையெனில், கருவுறுதல் இன்னும் குறைய வாய்ப்புள்ளது" என்று கூறினார்.

    மேலும், தம்பதிவகள் குழந்தைகளைப் பெற ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை சீனா அரசு அதிகாரிகள் தொடங்கியுள்ளனர். முதல் குழந்தையைப் பெற்ற தம்பதியினருக்கு 3,000 யுவான் வழங்கப்படுகிறது. இது அவர்களின் மூன்றாவது குழந்தைக்கு 10,000 யுவான்களாக உயரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நாட்டின் கிழக்கில், ஜினான் நகரம் ஜனவரி 1 முதல் இரண்டாவது குழந்தையைப் பெற்ற தம்பதிகளுக்கு மாதாந்திர உதவித்தொகையாக 600 யுவான் செலுத்தி வருகிறது.

    • இனி, 800 கோடியில் ஒருவர் நாம்.
    • நாளை உலக மக்கள்தொகை 800 கோடி ஆகப்போகிறது.

    நியூயார்க் :

    நாம் வசிக்கும் இந்த மாபெரும் பூமியின் மக்கள்தொகை எகிறிக்கொண்டே செல்கிறது. நாளை (செவ்வாய்க்கிழமை) உலக மக்கள்தொகை 800 கோடி ஆகப்போகிறது.

    ஐ.நா.வின் புதிய மக்கள்தொகை மதிப்பீட்டில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆக இனி, 800 கோடியில் ஒருவர் நாம்!

    பூமியில் மனிதர்களின் எண்ணிக்கை 800 கோடி ஆகப்போகும் தகவல், கடந்த ஜூலை 11-ந் தேதி, ஐ.நா.வால் வெளியிடப்பட்டது. உலக மக்கள்தொகை தினமான அன்றைய நாளில் வெளியான ஐ.நா. உலக மக்கள்தொகை வாய்ப்பு 2022 அறிக்கையில் அந்த தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த இலக்கை இன்னும் 2 நாட்களில் எட்டப் போகிறோம்.

    பூமிப்பந்து, மக்கள்தொகையால் பிதுங்கி வழிவது கொஞ்சம் பீதி ஏற்படுத்தினாலும், ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் நம்பிக்கையோடு பேசுகிறார்...

    'நமது பன்முகத்தன்மையை கொண்டாடுவதற்கான, பொது மனிதநேயத்தை அங்கீகரிப்பதற்கான, வாழ்நாளை நீட்டித்து, மகப்பேறுகால மற்றும் குழந்தை இறப்பு விகிதத்தை வெகுவாக குறைத்துள்ள மருத்துவத்துறையின் மகத்துவத்தை போற்றுவதற்கான நேரம் இது' என்கிறார்.

    அதேநேரம் ஐ.நா. பொதுச் செயலாளர் கூறும் முக்கியமான எச்சரிக்கை இது...

    'உலக மக்கள்தொகை 800 கோடியை எட்டுவது, நமது பூமியைக் காக்கும் நம்முடைய கூட்டுப் பொறுப்பை நினைவூட்டும் விஷயமும் ஆகும். நமது பொறுப்புகளில் எங்கே பின்தங்கியிருக்கிறோம் என்று சிந்திப்பதற்கான நேரமும் இது' என்கிறார்.

    2050-ம் ஆண்டளவில், உலக மக்கள்தொகையில் பாதிக்கு மேல், இந்தியா, பாகிஸ்தான், காங்கோ, எகிப்து, எத்தியோப்பியா, நைஜீரியா, பிலிப்பைன்ஸ், தான்சானியா ஆகிய 8 நாடுகளிலேயே அடங்கியிருக்கும் என்றும் ஐ.நா. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    உலக மக்கள்தொகை 700 கோடியில் இருந்து 800 கோடி ஆவதற்கு 12 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், இதிலிருந்து 900 கோடி தொடுவதற்கு 15 ஆண்டுகள் ஆகுமாம். ஆக 2037-ல்தான் அந்த 'மைல்கல்'லை எட்டுவோம். ஒட்டுமொத்த உலக மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் குறைந்து வருவதை இது காட்டுகிறது என்கிறார்கள் நிபுணர்கள்.

    • மேற்கு பகுதி ஊராட்சிகளில் திட்ட பணிகள் ஆய்வு மற்றும் மக்கள் சந்திப்பு பயணம் மேற்கொண்டார்.
    • எம்.பி. அலுவலகத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மற்றும் ஊராட்சி தலைவர்களோடு கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.

    பல்லடம் :

    கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் பல்லடம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மேற்கு பகுதி ஊராட்சிகளில் திட்ட பணிகள் ஆய்வு மற்றும் மக்கள் சந்திப்பு பயணம் மேற்கொண்டார். அப்போது சித்தம்பலம்,பருவாய், கரடிவாவி,மல்லேகவுண்டம்பாளையம், புளியம்பட்டி,கே கிருஷ்ணாபுரம்,வடுகபாளையம்புதூர் உள்ளிட்ட ஊராட்சிகளில் தற்போதைய மக்கள் தொகைக்கேற்ப குடிநீர் வழங்காததால் குடிநீர் பற்றாக்குறை உள்ளதாகவும் இந்த ஊராட்சிகளில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளதால், மக்கள் தொகை அடிப்படையில் அத்திக்கடவு குடிநீர் அதிகப்படுத்தி வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

    இதையடுத்து நடராஜன் எம்.பி. 5-ந் தேதி அன்று குடிநீர் விநியோகம் குறித்து ஆலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்வதாக கூறியிருந்தார். அதன்படி கோவையிலுள்ள நடராஜன் எம்.பி. அலுவலகத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மற்றும் சித்தம்பலம், புளியம்பட்டி, கோடாங்கிபாளையம் மல்லேகவுண்டம்பாளையம், கரடிவாவி பருவாய் உள்ளிட்ட ஊராட்சி தலைவர்களோடு கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இந்த ஊராட்சிகளில் தற்போதைய மக்கள் தொகைக்கு ஏற்ப குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் குடிநீர் விநியோகத்தை அதிகப்படுத்தி தருவதாக உறுதி அளித்தனர். கூட்டத்தில் பல்லடம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தேன்மொழி,பல்லடம் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் கிருஷ்ணமூர்த்தி,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பல்லடம் ஒன்றிய செயலாளர் பரமசிவம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • 7000 மக்கள் தொகை கொண்ட மேல்வைலாமூர் ஊராட்சியை 2 ஆக பிரிக்க அமைச்சரிடம் மனு அளிக்கப்பட்டது.
    • 100 நாள் வேலை திட்டம் உள்ளிட்ட பணிகளில் பொது மக்களை ஈடுபடுத்துவதில், மிகவும் சிரமம் உள்ளது

    விழுப்புரம்:

    மேல்வைலாமூர் ஊராட்சியை 2ஆக பிரிக்க வேண்டும் என்று அவ்வூர் ஊராட்சி மன்ற தலைவர் எல்லம்மாள் சம்பத் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சிமஸ்தானிடம் மனு ஒன்று அளித்துள்ளார்:-

    அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது: மேல்மலையனூர் தாலுக்கா மேல் வைலா மூர் ஊராட்சியில் மேல் வைலாமூர், மேட்டுவைலாமூர், கல்லேரி, காட்டுப்பாக்கம், ஆலபட்டறை தாங்கள், அடுக்குபாசி, ஆதி திராவிடர் காலனி ஆகிய கிராமங்கள் உள்ளன இவைகளில் மொத்தம் 7,000 மக்கள் தொகை உள்ளனர். 100 நாள் வேலை திட்டம் உள்ளிட்ட பணிகளில் பொது மக்களை ஈடுபடுத்துவதில், மிகவும் சிரமம் உள்ளது எனவே மேற்படி ஊராட்சியை இரண்டாக பிரித்து மேல் வைலமூர், அடுக்கு பாசி, ஆதிதிராவிடர் காலனி ஆகியவைகளை ஒரு ஊராட்சியாகவும் மேட்டு வைலா மூர், கல்லேரி, காட்டுப்பாக்கம், ஆலபட்டறை தாங்கள் ஆகியவைகளை ஒரு ஊராட்சியாகவும் அறிவிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

    • உலக மக்கள்தொகை நாள் இன்று கொண்டாடப்படுகிறது.
    • ஐ.நா. அறிக்கைபடி 2023-ம் ஆண்டில் உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக இந்தியா திகழும்.

    நியூயார்க்:

    ஐக்கிய நாடுகள் சபையின் சமீபத்திய கணிப்புகளின்படி உலக மக்கள் தொகை 2030-ம் ஆண்டில் சுமார் 8.5 பில்லியனாகவும், 2050-ம் ஆண்டில் 9.7 பில்லியனாகவும் வளரக்கூடும் என்று கணக்கிட்டுள்ளது.

    மேலும், இது 2080-களில் சுமார் 10.4 பில்லியன் மக்கள் தொகையை கொண்டிருக்கும் என்றும், 2100 வரை அந்த நிலையில் இருக்கும் என்றும் அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக, ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் கூறியதாவது:

    உலக மக்கள்தொகை நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு பூமியில் மக்கள்தொகை 8 பில்லியனாக அதிகரிப்பதை எதிர்பார்க்கிறோம். இது நமது பன்முகத்தன்மையைக் கொண்டாடுவதற்கும், நமது பொதுவான மனிதகுலத்தை அங்கீகரிப்பதற்கும், ஆரோக்கியத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களைக் கண்டு வியப்பதற்கும் ஒரு சந்தர்ப்பமாகும்.

    நீட்டிக்கப்பட்ட ஆயுட்காலம் மற்றும் தாய் மற்றும் குழந்தை இறப்பு விகிதங்கள் வியத்தகு முறையில் குறைக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில், இது நமது கிரகத்தை கவனித்துக்கொள்வதற்கான நமது அனைவருக்குமான பொறுப்பை நினைவூட்டுகிறது. மேலும், ஒருவருக்கொருவர் நமது கடமைகளை நாம் இன்னும் எங்கே இழக்கிறோம் என்பதைப் பற்றி சிந்திக்க ஒரு தருணம் என தெரிவித்தார்.

    ஐ.நா.வின் அறிக்கையின் படி 2023-ம் ஆண்டில் உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடான சீனாவை இந்தியா விஞ்சும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

    2022-ல் தலா 1.4 பில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகையுடன் சீனாவும் இந்தியாவும் இந்த பிராந்தியங்களில் மிகப்பெரிய மக்கள்தொகையைக் கொண்டுள்ளன.

    அறிக்கையின்படி, சீனாவின் 1.426 பில்லியனுடன் ஒப்பிடுகையில் 2022-ம் ஆண்டில் இந்தியாவின் மக்கள் தொகை 1.412 பில்லியனாக உள்ளது. இது 2023-ம் ஆண்டில் இந்தியா சீனாவை மிஞ்சும். 2050-ம் ஆண்டில் இந்திய மக்கள் தொகை 1.668 பில்லியனாக இருக்கும். அப்போது சீன மக்கள்தொகை 1.317 பில்லியனாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

    • ஆயுர்வேத மருத்துவ கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்றனர்
    • கலெக்டர் அரவிந்த் தலைமையில் மாணவ மாணவிகள் உறுதி மொழியும் எடுத்துக் கொண்டனர்

    நாகர்கோவில் :

    குமரி மாவட்ட குடும்ப நலத்துறை சார்பில் உலக மக்கள் தொகை தினத்தை ஒட்டி விழிப்புணர்வு பேரணி இன்று நடந்தது.

    நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்திலிருந்து தொடங்கிய விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் அரவிந்த் கொடியேற்றி தொடங்கி வைத்தார். பேரணியில் ஆயுர்வேத மருத்துவ கல்லூரி மாணவ மாணவிகள் பங்கே ற்றனர். பேரணியில் பங்கேற்ற மாணவிகள் விழிப்புணர்வு பலகைகளை ஏந்தியவாறு பேரணியாக சென்றனர்.

    கலெக்டர் அலுவலகத்தில் இருந்து தொடங்கிய விழிப்பு ணர்வு பேரணி டதி பள்ளி, எஸ்.எல்.பி.பள்ளி, வேப்பமூடு, அண்ணாபஸ் நிலையம் வழியாக கோட்டாறு ஆயுர்வேத மருத்துவ கல்லூரியை வந்தடைந்தது. பேரணியில் நாதஸ்வரம் முழங்க மாணவிகள் பேரணியாக வந்தனர். மருத்துவக் கல்லூரி முதல்வர் திருவாசகமணி, ஆயுர்வேத மருத்துவ கல்லூரி முதல்வர் கிளாரன்ஸ் டேவி, மருத்துவம் மற்றும் ஊரக நல பணிகள் துணை இயக்குனர் கற்பகவல்லி உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர். கலெக்டர் அரவிந்த் தலைமையில் மாணவ மாணவிகள் உறுதி மொழியும் எடுத்துக் கொண்டனர்.

    ×